=

மீனலோசனி – Tamil Kamakathaikal

மேலே வானம் இருட்டிவிட்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி யாருமில்லை. கடலலைகள் மட்டும் அடங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. நானும் மீனுவும் எங்கள் உதடுகள் சிக்கிக்கொண்ட நிலையில், உலகை மறந்து அமர்ந்திருந்தோம். எனது தடித்த உதடுகளை, மீனுவின் மெல்லிய பட்டு உதடுகள் உரசி தீமூட்டின. அவளுடைய எச்சில் துளிகள் தேனாய் என்னுள் பாய்ந்தன. தீயும், தேனும் ஒன்றாய் என்னை தாக்க, நான் மெய்மறந்துசிலையாக அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று எனக்கு நினைவில்லை.

“இங்கே பாரு மாமு.. சூப்பர் பிட்டு ஓடினிகிது..”என்று எங்கள் பின்னால் இருந்து வந்த சத்தத்தை கேட்டதும் இருவரும் விலகிக் கொண்டோம். நான் பின்னால் திரும்பி பார்த்தேன். ஒரு மூன்று பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தையும், உடையையும் பார்த்தால் யோக்கியமானவர்களாக தெரியவில்லை. நான் எழுந்து கொண்டேன்.“வா மீனு… கெளம்பலாம்..” நான் கைகளை நீட்டிக் கொண்டே சொன்னேன்.மீனு என் கைகளை பற்றி எழுந்தாள். மணலை தட்டிவிட்டுவிட்டு, இருவரும் மெயின் ரோட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம்.“இன்னா மாமு.. அவ்வளவுதானா…? சூப்பர் பிகரு… கொடுத்து வச்சவன்மா நீ…”பின்னால் இருந்து அவர்கள் கேலி பண்ணி சிரித்ததை கண்டுகொள்ளாமல் நாங்கள் நடந்தோம். மீனு தன் விரல்களை என் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். என் தோளில் சாய்ந்தவாறே என்னோடு சேர்ந்து நடந்து வந்தாள். வண்டி நிறுத்தியிருந்த இடத்தை அடைந்ததும்,“வீட்டுக்கு போயிரலாமா மீனு..?” என்றேன்.

“ம்ம்ம்… இந்தா நீ வண்டி ஓட்டு…” மீனு சாவியை என்னிடம் கொடுத்தபடியே சொன்னாள்.

நான்வண்டியை ஸ்டார்ட் செய்ய, மீனு பின்னால் அமர்ந்தாள். என் இடுப்பை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் முதுகில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். என் முதுகில் மெத்தென்று.. உருண்டையாய்.. எதுவோ ரெண்டு அழுந்த, எனக்கு அது சுகமாக இருந்தது. நான் வண்டியோடுபறக்க இல்லை.. இல்லை.. மிதக்க ஆரம்பித்தேன். என் காதல் தேவதை என்னை கட்டிக்கொண்டு சாய்ந்திருக்க, நான் மேகங்களுக்கிடையில் பயணிப்பதை போலவே உணர்ந்தேன். வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. இருவரும் அமைதியாகவே வீட்டுக்குள் நுழைந்தோம். எதிர்பட்ட ரவி மீனுவிடம் கேட்டான்.“என்ன மீனு… ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனிங்களா..? உங்க சண்டை தீந்துச்சா…?”“சண்டையா…? என்ன சண்டை…?”

மீனு மிக கேஷுவலாக கேட்டுவிட்டு ரவியை கடந்து சென்றாள். அவள் சொன்னதை கேட்டு, ரவி “ஆ” என்று வாயைப் பிளந்தவன்தான். அப்புறம் அந்த வாய் மூடுவதற்கு ரொம்ப நேரம் ஆனது.**************************************************************************************************************


அவன் வாயை மூடிய பிறகு ஒரு ரெண்டு மாதம் கழித்து…………………..நான் ஒரு க்ரோசினை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். காய்ச்சல் நேற்றை விட குறைந்திருந்தாலும், இன்னும் விட்டபாடில்லை. மெத்தையில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன்.“என்னடா ஃபீவர் இன்னும் விடலயா..?” ரவி அறைக்குள் நுழைந்தபடியே கேட்டான்.“இல்லைடா.. இன்னும் விடலை.. நைட்டுக்கு இப்போ கொஞ்சம் தேவலாம்..”“டாக்டருட்ட வேணா போகலாமாடா..?” பின்னால் வந்த மகேஷ் கேட்டான்.“இல்லைடா.. வேணாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்..”“சரிடா மச்சான்.. பாத்துக்க.. நாங்க ஆபீஸ் கெளம்புறோம்.. ரொம்ப முடியலைன்னா கால் பண்ணு.. பிரெட் வாங்கி வச்சிருக்கேன்.. பட்டினியா இருக்காத.. அதையாவது சாப்பிடு…”சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். நான் ரூம் சீலிங்கை பார்த்தபடி படுத்துக் கிடந்தேன். எனக்கு பீவர் என்பது மீனுவுக்கு தெரியாது. தெரிந்தால் துடித்துப் போய் விடுவாள். இந்த இரண்டு மாதத்தில் நானும், மீனுவும் மிக நெருங்கிப் போனோம். அவள் என்மேல் வைத்திருந்த காதலை உணர்ந்து நான் பெருமிதம் கொள்ளாத நாளே இல்லை. இவளைப் போல பெண் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.மீனுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க, எனக்கு வெகுநேரம் தூக்கமே வரவில்லை. பின்பு கண்கள் மெல்ல செருக ஆரம்பித்தபோது, யாரோ கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வருவது போல உணர்ந்தேன். போர்வையை விலக்கி நிமிர்ந்து பார்த்தேன். மீனுதான் வந்து கொண்டிருந்தாள். ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் மாடர்ன் தேவதையாக காட்சியளித்தாள். அவள் முகத்தில் வழிந்த கவலையை பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது.“என்ன மீனு…? இப்போ வந்திருக்க..? ஆபீஸ் போகலை..?”“ஏண்டா.. ஃபீவர்‘னா சொல்ல மாட்டியா..?” அவள் குரலில் உண்மையான கோபம் தெரிந்தது.“லைட்டாதான் மீனு.. இப்போ சரியாயிடுச்சு… பசங்க சொன்னாங்களா..?”“ம்ம்ம்.. மகேஷை பார்த்தேன்.. அவன்தான் சொன்னான்.. உடனே ஓடி வர்றேன்..”சொன்ன மீனு கட்டிலுக்கு அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். தன் வலது கையை என் நெற்றியில் வைத்து தொட்டுப் பார்த்தாள்.“சரியாயிடுச்சுன்ன..? கொதிக்குது…?”“நேத்து ரொம்ப அதிகமா இருந்தது மீனு.. இப்போ பரவாயில்லை…”

See also  நானும் அவளை அனைத்தபடி - Tamil Kamakathaikal

“ம்ம்ம்…. அவ்வளவு ஃபீவர் இருந்திருக்கு.. என்கிட்டே சொல்லலை.. நேத்து போன் பண்ணி பேசுறப்போ கூட வாயை மூடிக்கிட்டு இருந்திருக்க..?” சொன்ன மீனு என்னை முறைத்தாள். “சொல்லி உன்னை கஷ்டப்படுத்த வேணாமேன்னு நெனச்சேன்…”

“ம்ம்… இன்னும் இப்படிலாம்பேசுறதுக்கு… உன் பல்லை உடைக்கணும்.. சரி வா… கெளம்பு…”“எங்கே..?”“டாக்டருட்ட போகலாம்…”“டேப்லட் போட்டுருக்கேன் மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்..”“அது சரியாகுறது இருக்கட்டும்.. வா.. எதுக்கும் நாம போய் டாக்டரை பாத்துடலாம்…”“சொன்னா கேளு மீனு.. டாக்டர்லாம் வேணாம்…”“ஏன் டாக்டர்னா மெறள்ற..? ஊசி போட்டுருவாருன்னு பயமா…?”“ஊசி போட்டா பரவாயில்லை.. இது பண்ணாத.. அது பண்ணாதன்னு ஒரே அட்வைசா இருக்கும்…..”“ம்ம்ம்ம்… நல்லது சொன்னா உனக்கு புடிக்காதே..? அப்படியே ரெண்டு போடணும்… சாப்பிட்டாச்சா..?”“ம்ம்ம்.. சாப்ப்பிட்டேன்..”“பொய் சொல்லாத..?”

“நெஜமா மீனு.. ரவி பிரெட் வாங்கி வச்சிருந்தான்.. சாப்பிட்டேன்..”

மீனுவின் முகத்தில் இப்போது கோபமும் , கவலையும் மறைந்து காதல் பொங்க ஆரம்பித்திருந்தது. அவளுடைய வலது கையை எடுத்து என் கழுத்தில் வைத்துப் பார்த்தாள். பின்னர் மார்பில்.“எனக்கு ஒன்னும் இல்லை மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்.. நீ வேண்ணா ஆபீசுக்கு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்…”“பரவால்லை.. அங்க ஒரு மசுரு புடுங்குற வேலையும் கிடையாது.. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேன்..”சொல்லிவிட்டு மீனு என் முகத்தையே காதலுடன் பார்க்க, நானும் அவளது முகத்தை பார்க்க ஆரம்பித்தேன். மீனு என் நெற்றியில் கைவைத்து, என் தலைமயிரை அலைந்து கொண்டிருந்தாள். நான் மாசு மருவில்லாத அவளது குழந்தை முகத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஜன்னல் வழியே ஜில்லென்று காற்று வீச, எனக்கு குளிர்ந்தது.“அந்த ஜன்னலை கொஞ்சம் மூடிர்றியா மீனு..? எனக்கு குளுருது..”மீனு ஒரு வினாடி என் முகத்தையே பார்த்தாள். பின்பு எழுந்து சென்று ஜன்னல் கதவை இழுத்து மூடினாள். திரும்பவும் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.“ரொம்ப குளுருதா..?” என்றாள்.“ம்ம்..”நான் சொன்னதும் மீனு பட்டென்று சேரில் இருந்து எழுந்துகொண்டாள். என்னைப் பார்த்து சொன்னாள்.“கொஞ்சம் தள்ளிப் படு…”“எதுக்கு…?”

Hits: 4039

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!